இளைய தளபதியின் அடுத்த படம்

கத்தி' படத்திற்குப் பிறகு விஜய் அடுத்து நடிக்கப் போகும் படங்களைப் பற்றிய தகவல்கள் ஏற்கெனவே பரபரப்பாக ஆரம்பமாகிவிட்டன.
விஜய் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார் என்பதும், படத்தில் இந்தியத் திரையுலகின் முன்னாள் கனவுக் கன்னி ஸ்ரீதேவியும் நடிக்கிறார் என்பதும் படத்தைப் பற்றிய முக்கிய செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதனிடையே, விஜய்க்கு படத்தில் இன்னொரு ஜோடியும் இருக்கிறதென்றும் தகவல்கள் வெளியாகி அவற்றில் இவர் நடிக்கிறார், அவர் நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், அவற்றில் உண்மையில்லை என்றும் சொல்கிறார்கள். படத்தில் ஸ்ரீதேவியை நடிக்க வைப்பதற்கு இயக்குனர் சிம்புதேவன் நிறையவே மெனக்கெட்டாராம்.

ஸ்ரீதேவியை நேரில் சென்று சந்தித்தவர், அவரிடம் மொத்த கதையையும் சொல்லியிருக்கிறார். கதையைக் கேட்டுப் பிடித்துப் போன ஸ்ரீதேவி அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தாகவும் சொல்கிறார்கள். படம் ஒரு சரித்திரப் படம் என்றும் அதில் ஸ்ரீதேவி ராணியாக நடிக்கப் போவதாகவும் கூட தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு சிலர் ஸ்ரீதேவி, விஜய்யின் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றெல்லாம் கூட சொல்லி வருகிறார்கள். ஸ்ரீதேவி நடிப்பது உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் அடுத்து அவருக்குப் பொருத்தமான ஜோடியாக நடிக்கப் போவது யார் என்றும் இப்போது பேச்சு எழுந்துள்ளது. தமிழில் அவருடைய அழகுக்கு இணையாக நடுத்தர வயதில் இப்போது எந்த நடிகர் இருக்கிறார் என்றும் பேச ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் ஒரு சில வாரங்களுக்குள் படத்தைப் பற்றிய முழுமையான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. அதுவரை இன்னும் பல தகவல்களை விதவிதமாக நாம் எதிர்பார்க்கலாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget