ஸ்ரீதேவியின் விஜய் பட அனுபவம்


கடந்த காலங்களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப்பறந்த கதாநாயகி நடிகைகளை பட்டியலிட்டால்..அதில் தவிர்க்க முடியாத பெயர்
ஸ்ரீதேவி. எழுபதுகளின் பிற்பகுதியிலும், எண்பதுகளிலும் தமிழ்சினிமாவில் நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வந்தவர்.

ரஜினி, கமல் என இரண்டு முன்னணி ஹீரோக்களுடன் ஒரே நேரத்தில் பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த ஸ்ரீதேவி, 28 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாரீசன் படத்தில் மகாராணியாக நடிக்கிறார் ஸ்ரீதேவி. தற்போது சென்னை ஈசிஆரில் உத்தண்டி என்ற ஊரில் உள்ள பிரம்மாண்ட செட்டில் விஜய், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப், மற்றும் 300 துணை நடிகர்களுடன் இப்படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.

மாரீசன் படத்தில் நடிப்பது குறித்து தன்னுடைய அனுபவங்களையும் சந்தோஷங்களையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஸ்ரீதேவி.

புதிய தமிழ்படம் ஒன்றுக்காக சென்னையில் படப்பிடிப்பில் இருக்கிறேன். குழந்தை நட்சத்திரமாக நான் நடித்த முதல் பட ஷூட்டிங் என் ஞாபகத்தில் வந்து போகிறது. என்மீது இப்போதும்கூட மாறாத அன்பு வைத்திருக்கும் சென்னைக்கு என் நன்றிகள். இன்றைய தலைமுறை நடிகர்கள், டெக்னீஷியன்கள் அனைவருமே சிறந்த வல்லுனர்களாக இருக்கிறார்கள். அவர்களுடன் வேலை செய்யும்போது நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. என தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சந்தோஷப்பட்டிருக்கிறார் ஸ்ரீதேவி.

படப்பிடிப்புக்காக சென்னைக்கு வந்துள்ள ஸ்ரீதேவி, மயிலாப்பூரில் உள்ள தன்னுடைய வீட்டில் தங்காமல் நட்சத்திர ஹோட்டலில் தங்கி படப்பிடிப்புக்கு சென்று வருகிறாராம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget