புத்தாண்டில் வெளியாகும் படங்கள்

புதிய ஆண்டு பிறக்கும் போது முதல் வாரத்திலேயே வெளிவரும் படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும்.
ஓரிரு படங்கள் வேண்டுமானால் வெளிவரும். பொங்கல் தினம்தான் ஒரு புதிய ஆண்டின் முக்கிய வெளியீட்டு நாளாக இருக்கும். ஆனால், டிஜிட்டல் யுகம் வந்த பிறகு எல்லா வெள்ளிக்கிழமையும் வெளியீட்டு நாளாகவே அமைந்து விட்டது. 2014ம் ஆண்டின் முதல் வாரத்திலேயே ஐந்தாறு படங்கள் வெளிவந்ததைப் போல 2015ம் ஆண்டின் முதல் வெள்ளிக்கிழமையான ஜனவரி 2ம் தேதி இதுவரை 6 படங்கள் வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

“ஆய்வுக் கூடம், விருதலாம் பட்டு, திரு.வி.க.பூங்கா, விஷயம் வெளிய தெரியக் கூடாது, மனித காதல் அல்ல, வேட்டையாடு” ஆகிய படங்கள் அன்றைய தேதியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் வாரத்திலேயே 6 படங்கள் வெளியாகிறது என்றால் இன்னும் போகப் போக எவ்வளவு படங்கள் வெளிவர உள்ளன என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget