ஜெயிக்கிற குதிரை டிம்பிள் சோப்தேவ்

சினிமா உலகைப் பொறுத்தவரை படங்கள் தோல்வி என்றால் அதில் நடித்த நடிகர் நடிகைகளுக்கு அடுத்தடுத்து படங்கள் கிடைக்காது.
ஆனால் யாருடா மகேஷ, கல்கண்டு படங்களில் நடித்த டிம்பிள் சோப்தேவுக்கு படங்கள் ஓடாதபோதும், அடுத்தபடியாக ஷக்திசிதம்பரம் இயக்கத்தில் ஜீவன் நடிககும் ஜெயிக்கிற குதிரை படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்துள்ளது.

அதுவும், முந்தைய படங்களை விட பர்பார்மென்ஸ் வெளிப்படுத்த பல காட்சிகள் அவருக்கு உள்ளதாம். அதோடு, பாடல் காட்சிகளில் டிம்பிள் சோப்தேவை மிக அழகாக காண்பிக்கும் வகையில், அவருக்கான காஸ்டியூம்களை லட்சங்களை கொட்டி ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்களாம். இதனால் முந்தைய படங்களை விடஇந்த படத்தில் ரொம்ப அழகாக வெளிப்படப்போகிறாராம் டிம்பிள் சோப்தே.

மேலும், இந்த ஜெயிக்கிற குதிரை படப்பிடிப்பை தற்போது ஒரே கடடமாக 45 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளார் ஷக்தி சிதம்பரம். அதனால், சென்னையில் முகாமிட்டிருக்கும் டிம்பிள் சோப்தே. சில நாட்களில் தனக்கு ஒரேயொரு சீன் மட்டுமே படமாக்கப்பட்டாலும், அதையடுத்து மற்றவர்கள் நடிப்பதை ஸ்பாட்டுக்கு சென்று வேடிக்கை பார்க்கிறாராம். முக்கியமாக ஜீவன் நடிக்கும் சில காட்சிகளைப்பார்த்து விட்டு,அவர் பிரமாதமாக நடித்தால் கைதட்டி ஆரவாரம் செய்கிறாராம் டிம்பிள். அதோடு, நான் உங்களது ரசிகையாகி விட்டேன் என்றும் ஜாலியாக ஜீவனை கலாய்க்கிறாராம் டிம்பிள் சோப்தே.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget