உயரத்தில் பறந்த ராய் லட்சுமி

சினிமாவில் உயரமாக பறக்க முடியாவிட்டாலும் வானத்தில் உயரமாக பறந்து திரும்பி இருக்கிறார் ராய் லட்சுமி. நடிகை ராய் லட்சுமி ஒரு ஜாலிப்
பறவை சினிமா வாய்ப்புகள் பற்றி கவலையே படாமல் தன் நண்பர்களுடன் ஜாலி டிரிப் அடிப்பதில் ஆர்வம் மிக்கவர். கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், டோனி ஆகியோருடன் நிறைய ஜாலி டிரிப் அடித்திருக்கிறார். தற்போது தனது நீண்ட நாள் கனவான ஸ்கை டைவிங் அடித்து திரும்பி இருக்கிறார். அந்தப் படத்தை தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: சின்ன வயதிலிருந்தே எனக்கு அட்வென்சர்னா ரொம்ப பிடிக்கும், காட்டுக்குள் போற டிரக்கிங் டூர் நிறைய போயிருக்கேன். விமானத்துல பறக்கும்போது இங்கே இருந்து கீழே குதிச்சா எப்படி இருக்கும்னு பல தடவை கற்பனை பண்ணி பார்த்திருக்கேன். அப்பதான் ஒரு தடவையாவது ஸ்கைடைவிங் பண்ணணும்னு விரும்பினேன்.

அதற்கான நேரம் 2015ம் ஆண்டுதான் கிடைத்தது. துபாயில் எனது புத்தாண்டை வானத்தில் பறந்து கொண்டாடினேன். 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பூமியை ரசித்தபடியே கீழே இறங்கியது மறக்க முடியாத அனுபவம். உலகத்தை தூரத்திலிருந்து பார்க்கும்போது நம்பிக்கை வருகிறது. இந்த அழகான உலகில் நம்மை படைத்த இறைவனுக்கு நன்றி சொல்லணும்" என்று நெகிழ்கிறார் ராய் லட்சுமி.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget