இணையம் இல்லாமல் நாம் இனி வாழ முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நாம், இணையத்தின் ஓர் அங்கமாக இருக்கும் கூகுள்
நிறுவனத்தின் தலைவர் “இனி இணையம் மறைந்துவிடும்” என்று கூறுவது அதிர்ச்சியாக உள்ளதா? மேலும் படியுங்கள். சென்ற ஜனவரி இறுதியில், உலகப் பொருளாதார மாநாட்டில் உரையாற்றுகையில் இந்த கருத்தினை வெளியிட்டார் எரிக் ஸ்மித். தொடர்ந்து உரையாற்றுகையில், இப்போது இணையம் என்பது, நம் வாழ்வில் பிரித்துப் பார்க்கப்படுகிறது.
எதிர்காலத்தில், இந்தப் புவி எங்கும், நம் அனைவரையும் இணையம் சூழ்ந்திருக்கும் என்றார். நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் இணையத்துடன் இணைந்ததாக இருக்கும். நாம் அணியும் ஆடைகள் உட்பட அனைத்திற்கு இணைய முகவரிகளும், இணைய இயக்கத்தை அறியும் சென்சார்களும் இருக்கும். எடுத்துக் காட்டாக, ஒருவர் ஓர் அறையில் நுழைந்தால், உடனே அந்த அறை, நாம் அணிந்திருக்கும் ஆடையை உணர்ந்து, நாம் யார் என்று அறிந்துகொண்டு, அந்த அறையில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்த அனுமதி அளிக்கும். மாறாக அனுமதிக்கப்படாதவராக அவர் இருந்தால், அவரை அனுமதிக்காது. அனைத்து பொருட்களின் இயக்கத்தினையும் முடக்கிவிடும். இது போல, எங்கும் எதிலும் இணையம் இருக்கும் என்பதால், இணையம் என்ற ஒன்றை நாம் தனித்துப் பார்க்க இயலாது. அந்த இலக்கினை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்றார் எரிக் ஸ்மித். இதற்கான திட்டங்களை கூகுள் மேற்கொள்ளும் என்றும் கூறினார்.
இன்னும் உலக அளவில் 500 கோடிப் பேருக்கு மேல் இணைய இணைப்பு இல்லாமல் இருக்கும் சூழ்நிலையில் இது சாத்தியமாக்கப்பட்டால், அது மானிட சரித்திரத்தில் பெரிய மாற்றமாக இருக்கும்.
நிறுவனத்தின் தலைவர் “இனி இணையம் மறைந்துவிடும்” என்று கூறுவது அதிர்ச்சியாக உள்ளதா? மேலும் படியுங்கள். சென்ற ஜனவரி இறுதியில், உலகப் பொருளாதார மாநாட்டில் உரையாற்றுகையில் இந்த கருத்தினை வெளியிட்டார் எரிக் ஸ்மித். தொடர்ந்து உரையாற்றுகையில், இப்போது இணையம் என்பது, நம் வாழ்வில் பிரித்துப் பார்க்கப்படுகிறது.
எதிர்காலத்தில், இந்தப் புவி எங்கும், நம் அனைவரையும் இணையம் சூழ்ந்திருக்கும் என்றார். நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் இணையத்துடன் இணைந்ததாக இருக்கும். நாம் அணியும் ஆடைகள் உட்பட அனைத்திற்கு இணைய முகவரிகளும், இணைய இயக்கத்தை அறியும் சென்சார்களும் இருக்கும். எடுத்துக் காட்டாக, ஒருவர் ஓர் அறையில் நுழைந்தால், உடனே அந்த அறை, நாம் அணிந்திருக்கும் ஆடையை உணர்ந்து, நாம் யார் என்று அறிந்துகொண்டு, அந்த அறையில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்த அனுமதி அளிக்கும். மாறாக அனுமதிக்கப்படாதவராக அவர் இருந்தால், அவரை அனுமதிக்காது. அனைத்து பொருட்களின் இயக்கத்தினையும் முடக்கிவிடும். இது போல, எங்கும் எதிலும் இணையம் இருக்கும் என்பதால், இணையம் என்ற ஒன்றை நாம் தனித்துப் பார்க்க இயலாது. அந்த இலக்கினை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்றார் எரிக் ஸ்மித். இதற்கான திட்டங்களை கூகுள் மேற்கொள்ளும் என்றும் கூறினார்.
இன்னும் உலக அளவில் 500 கோடிப் பேருக்கு மேல் இணைய இணைப்பு இல்லாமல் இருக்கும் சூழ்நிலையில் இது சாத்தியமாக்கப்பட்டால், அது மானிட சரித்திரத்தில் பெரிய மாற்றமாக இருக்கும்.
கருத்துரையிடுக