சஸ்பென்சை உடைத்த ஹீரோயின்

வசந்த் இயக்கிய 3 பேர் 3 காதல், தேசிங்கு ராஜா படங்களைத் தொடர்ந்து தமிழில் தாமிரபரணி பானு வாய்மை, வாசுவும் சரவணனும் ஒண்ணா
படிச்சவங்க, பாம்பு சட்டை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் அவருக்கு வித்தியாசமான கேரக்டர்கள்தான். கதாநாயகிகளாக வேறு நடிகைகள்தான் நடிக்கிறார்கள். இதில் பாம்பு சட்டை படத்தில் திடீரென்று பானு கமிட்டானபோது அப்பட நாயகியான கீர்த்தி சுரேஷ் பேரதிர்ச்சி அடைந்தாராம். அதையடுத்து, பானு இந்த படத்தில் இன்னொரு நாயகி இல்லை. அவர் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறார். அதைகூட கடைசி வரை சஸ்பென்சாகத்தான் வைக்கப்போகிறேன் என்று டைரக்டர் அவரிடம் சொன்னாராம்.

அதேபோல், பானுவிடமும், படம் வெளியாகிற வரைக்கும் இந்த படத்தில் நடிக்கிற விசயத்தையே வெளியில் சொல்லக்கூடாது என்று கண்டிசன் போட்டுத்தான் கமிட் பண்ணினார்களாம். ஆனால் அவரோ, சில மீடியாக்களிடம் அந்த படத்தில் நான் நடிப்பது மட்டுமின்றி தனது கேரக்டர் பற்றியும் லீக்அவுட் செய்து விட்டாராம் பானு. இதனால் கடும் கோபத்துக்கு ஆளான அப்பட டைரக்டர், பானுவிடம் கடிந்து கொண்டாராம். அதனால் சிலநாட்கள் படப்பிடிப்பு தளத்தில் மெளனத்தை கடைபிடித்து வந்தாராம் பானு.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget