வேதாளம் படத்தை அடுத்து அஜீத் நடிக்கும் 57-வது படத்தையும் சிவா இயக்கும் நிலையில், அந்த படத்தின் ப்ரீ-புரொடக்சன்ஸ் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது அஜீத் பேமிலியுடன் வெளிநாட்டில் முகாமிட்டிருப்பதால் ஜூலை 15-
ந்தேதி முதல் அந்த படம் தொடங்குவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அப்படத்திற்கு இசையமைக்கும் அனிருத், வெளிநாட்டில் இருக்கும் அஜீத்தை இங்கிருந்தபடியே டியூன்களை கேட்க வைத்து ஓகே செய்து கொண்டிருக்கிறாராம்.
மேலும், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிப்பது என்பது பற்றிய செய்தியை இன்னும் வெளியிடாமல் சீக்ரெட்டாக வைத்திருக்கிறார் சிவா. அவரது பேவரிட் நாயகி தமன்னா நடிப்பார் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டாலும் பின்னர் அந்த செய்தி அடங்கி விட்டது. தற்போது இரண்டு நாயகிகள் நடிக்கும் அந்த படத்தில் ஒரு நாயகியாக அனுஷ்கா ஒப்பந்த மாகியிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் இன்னொரு நாயகி யார் என்பது சஸ்பென்சாக உள்ளது. அதனால் அவராக இருக்குமோ, இவராக இருக்குமோ என்ற யூகங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இறுதிச்சுற்று படத்தில் நடித்து விட்டு விஜயசேதுபதியுடன் ஆண்டவன் கட்டளையில் நடித்துள்ள ரித்திகா சிங்கின் பெயரும் அந்த கம்பெனி வட்டாரத்தில் அடிபடுவதாக இன்னொரு புதிய செய்தி தற்போது கசிந்துள்ளது.
ந்தேதி முதல் அந்த படம் தொடங்குவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அப்படத்திற்கு இசையமைக்கும் அனிருத், வெளிநாட்டில் இருக்கும் அஜீத்தை இங்கிருந்தபடியே டியூன்களை கேட்க வைத்து ஓகே செய்து கொண்டிருக்கிறாராம்.
மேலும், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிப்பது என்பது பற்றிய செய்தியை இன்னும் வெளியிடாமல் சீக்ரெட்டாக வைத்திருக்கிறார் சிவா. அவரது பேவரிட் நாயகி தமன்னா நடிப்பார் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டாலும் பின்னர் அந்த செய்தி அடங்கி விட்டது. தற்போது இரண்டு நாயகிகள் நடிக்கும் அந்த படத்தில் ஒரு நாயகியாக அனுஷ்கா ஒப்பந்த மாகியிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் இன்னொரு நாயகி யார் என்பது சஸ்பென்சாக உள்ளது. அதனால் அவராக இருக்குமோ, இவராக இருக்குமோ என்ற யூகங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இறுதிச்சுற்று படத்தில் நடித்து விட்டு விஜயசேதுபதியுடன் ஆண்டவன் கட்டளையில் நடித்துள்ள ரித்திகா சிங்கின் பெயரும் அந்த கம்பெனி வட்டாரத்தில் அடிபடுவதாக இன்னொரு புதிய செய்தி தற்போது கசிந்துள்ளது.
கருத்துரையிடுக