சிம்புவுக்கு ஜோடியாகும் நயன்தாரா

வல்லவன் படத்தில் நடித்து வந்தபோது காதலில் விழுந்த சிம்பு-நயன்தாரா ஜோடி அந்த படம் ரிலீசாகி சில மாதங்களிலேயே பிரிந்து விட்டனர். அதனால் அவர்கள் அதன்பிறகு எந்த படத்திலும்
இணையவில்லை. இருப்பினும் பல ஆண்டுகளுக்குப்பிறகு அவர்களை டைரக்டர் பாண்டிராஜ் இது நம்ம ஆளு படத்துக்காக இணைத்து படமெடுத்து விட்டார். அப்படி அவர்கள் நடித்து வெளியாகியுள்ள படமும் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் சமீபகாலமாக தோல்விகளாக சந்தித்து வந்த சிம்பு அதிக மகிழ்ச்சியில் இருக்கிறார். மேலும், இது நம்ம ஆளு படம் எந்தெந்த நாடுகளில் எந்த அளவுக்கு கலெக்சன் பெற்ற வருகிறது என்பதை உன்னிப்பாக கவனித்து அதை இணையதளத்தில் ரசிகர்களுடனும் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், அச்சம் என்பது மடமையடா படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரனின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், இது நம்ம ஆளு படத்தின் க்ளைமாக்சைப்போன்று நிஜ வாழ்க்கையில் நயன்தாராவுடன் இணைய வாய்ப்புள்ளதா? என்று சிம்புவை நோக்கி ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு, அதற்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ள சிம்பு, சினிமாவில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார். ஆக, விரைவில் சிம்பு, நயன்தாரா ஜோடி இணையும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget