கிராமத்து பெண்ணாக கலக்கும் பிரியாஆனந்த்

தமிழில், கூட்டத்தில் ஒருத்தன், முத்துராமலிங்கம் படங்களில் நடித்துள்ள பிரியாஆனந்த், மலையாளத்தில் பிருத்விராஜ்க்கு ஜோடியாக
எஸ்ரா என்ற படத்திலும் நடித்துள்ளார். அப்படம் டிசம்பர் 22-ந்தேதி வெளியாகிறது. இதேபோல் தமிழில் பிரியாஆனந்த் நடித்துள்ள இரண்டு படங்களும் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன. இந்த படங்களில் வை ராஜா வை படத்தில் கெளதம் கார்த்தியுடன் நடித்த பிரியாஆனந்த் தற்போது முத்துராமலிங்கம் படத்திலும் நடித்துள்ளார். அதோடு, பக்கா கிராமத்து பெண்ணாக பாவாடை தாவணி உடையணிந்து இளவட்ட ரசிகர்களை சுண்டியிழுக்கும் சுட்டிப்பெண்ணாக பர்பாமென்ஸ் கொடுத்திருக்கிறாராம்.

மேலும், நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிலம்பாட்ட கலைஞனாக கெளதம் கார்த்திக் நடிக்க, அவரது காதலியாக பிரியாஆனந்த் நடித்துள்ளார். இதற்கு முன்பு மாடர்ன் கெட்டப்பிலேயே பெரும்பாலும் நடித்துள்ள அவர், இந்த படத்தில் முதன்முறையாக திருநெல்வேலி பெண்ணாக நடித்திருக்கிறார். படம் முழுக்க சுட்டிப்பெண்ணாக நடித்தபோதும், கிராமத்து வெட்கத்தை தனது முகத்தில் கொண்டு வந்து நடித்திருக்கிறாராம். கூடவே, குறும்பான கிளுகிளு காட்சிகளிலும் இயல்பாக நடித்திருக்கிறாராம் பிரியாஆனந்த்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget