சின்னத்திரை நாயகி திவ்யா

கடந்த 5 ஆண்டுகளாக முன்னணி தொலைக்காட்சிகள் பலவற்றிலும் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்தவர் திவ்யா. தொகுப்பாளினி வேலை போரடித்துவிட்டதோ
என்னவோ செய்தி வாசிப்பாளராகிவிட்டார். அடுத்த கட்டமாக சினிமாவிலும் நடிக்க இருக்கிறார்.

"செய்தி வாசிப்பாளரானாலும் இடையிடையே சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறேன். ஒரே மாதிரியான வாழ்க்கை போரடித்துவிட்டது. அதனால்தான் சின்ன மாற்றம் செய்து கொண்டிருக்கிறேன்.

இனி சின்னத்திரை தொடர்களிலும், சினிமாவிலும் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். இதற்காக நல்ல வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கிறேன். நான் நடிக்கும் சீரியல் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும். சினிமாவில் தொகுப்பாளினி சினிமாவிலும் தொகுப்பாளினியாகவோ அல்லது டி.வி.நிருபராகவோத்தான் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகிறது. தொகுப்பாளினியாக இருந்தாலும் நடிகை என்றான பிறகு எல்லா கேரக்டரிலும் நடிக்க முடியும் தானே. அதனால் அதற்கேற்ற வாய்ப்புகளை தேடி வருகிறேன்" என்கிறார் திவ்யா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget