தேவையானவை: மிதி பாகற்காய், சின்ன
வெங்காயம் – தலா அரை கப், பூண்டு – 4 பல், தக்காளி – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, தேங் காய்ப்பால் – ஒரு கப், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், குழம்பு பொடி – 2 டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள், உப்பு – தேவையான அளவு,
செய்முறை: மிதி பாகற்காயை காம்பு நீக்கி கழுவி, இரண்டாக நறுக்கி, சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக் கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தா ளித்து… நறுக்கிய வெங்காயம், கறிவே ப்பிலை, பூண்டு, தக்காளி சேர்த்து நன் றாக வதக்கவும். இதில் உப்பு, மஞ்சள்தூ ள், மிளகாய்த்தூள், குழம்பு பொடி, வேக வைத்த பாகற்காய் போட்டு மறுபடியும் வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, நன்றாகக் கொதி த்ததும் தேங்காய்ப்பால் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

கருத்துரையிடுக